இந்தியா

பெங்களூரு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 1.15 லட்சம் கோடி ரூபாய் கேட்கும் சித்தராமையா..!
- இந்தியாவின் ஜிடிபி-யில் 8.7 சதவீதம் கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பாகும்.
- எங்களிடம் வசூலிக்கும் ஒரு ரூபாயில் இருந்து 15 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இன்று 16ஆவது நிதி ஆணைய தலைவர் அரவிந்த் பனகாரியாவை சந்தித்தார். அப்போது மத்திய வரி பகிர்வில் கர்நாடக மாநிலத்திற்கு அதிக வரி ஒதுக்கப்பட வேண்டும். பெங்களூரு கட்டமைப்பை வலுப்படுத்த 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவின் ஜிடிபி-யில் 8.7 சதவீதம் கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பாகும். 5 சதவீத மக்களை கொண்டு இந்த பங்களிப்பு கொடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வசூலில் 2ஆவது இடத்தில் உள்ளது. எங்களிடம் வசூலிக்கும் ஒரு ரூபாயில் இருந்து 15 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. இது பேலன்ஸ் இல்லாதது எனத் தெரிவித்துள்ளார்.
Next Story