என் மலர்

    புதுச்சேரி

    தமிழகம்-புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி முடிவு எடுப்பார்கள்- ஆர்.எஸ்.பாரதி
    X

    தமிழகம்-புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி முடிவு எடுப்பார்கள்- ஆர்.எஸ்.பாரதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும்.
    • புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது.

    கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் தங்க தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா ஆகியோர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும். ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஒரு கோடி வீடுகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று, 2.70 கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர்.

    அடுத்தகட்டமாக புதுவை மாநிலத்திலும் வருகிற 2026 தேர்தலையொட்டி ஒரு வாரத்துக்குள் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதற்கான ஆயத்த பணியை தொடங்க கதிர்காமம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு, கருணாநிதி சிலை திறப்பு, இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்ததுபோல நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் 30 தொகுதியிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். 30 தொகுதியிலும் திமுக வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வோம்.

    புதுச்சேரியில் 4 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. 5-வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரத்தில் தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு அமையும்.

    புதுச்சேரிக்கும் சேர்த்து தமிழக தி.மு.க.தான் தலைமை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகம், புதுச்சேரி மாநில முடிவுகளை எடுப்பார்கள். யாருக்கு எத்தனை சீட் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அதை தி.மு.க ஏற்கும், காங்கிரசும் ஏற்கும் என நம்புகிறேன். 30 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளை தி.மு.க. உருவாக்கும்.

    அண்ணாமலை பியூஸ் போன பல்பு. அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் சரியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம். தி.மு.க. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 2019 முதல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    அவர் கூட்டணியிலிருந்து அல்ல, கட்சியிலிருந்து பாதி பேர் வெளியே சென்று விட்டனர். ஒவ்வொருவராக தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி அவர் நிலையை முதலில் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விஜய் பற்றி கேட்காதீர்கள். 1980 தேர்தலுக்கு நாராயணசாமி நாயுடுக்கு மிகப்பெரும் கூட்டம் கூடியது.

    அவரை இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி சென்று பார்த்தனர். அந்த கட்சி இப்போது எங்கே உள்ளது? இதுபோல பல உதாரணம் உள்ளது. கூட்டம் சேர்வதை வைத்து கணக்கிட கூடாது. திடீர் பிள்ளை யாருக்கு கூட கூட்டம் கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×