என் மலர்

    புதுச்சேரி

    அரசியலமைப்பை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் 1-ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்- காங்கிரஸ்
    X

    அரசியலமைப்பை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் 1-ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்- காங்கிரஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர்.
    • துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு சாதகமாக கவர்னர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பா.ஜ.க.வினர் கண்டிக்கின்றனர். உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்றம் பெரியதா அல்லது உச்சநீதி மன்றம் பெரியதா என்ற கேள்வியை எழுப்பு கின்றார்கள். அது பேசும் பொருளாக மாறியுள்ளது. துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது.

    இதை கண்டித்தும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் மே 1-ந் தேதி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

    மே 3-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை மாவட்ட ரீதியில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். மே 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து தொகுதிதோறும் போராட்டம் நடத்தப்படும். மே 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வீடுகள் தேடிச்சென்று மக்களை சந்திப்பு நடத்தப்படும்

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

    Next Story
    ×