என் மலர்

    புதுச்சேரி

    ஜெராக்ஸ் பத்திரத்தை கொடுத்து தாயாரிடமே ரூ.2 லட்சம் மோசடி செய்த மகள்
    X

    ஜெராக்ஸ் பத்திரத்தை கொடுத்து தாயாரிடமே ரூ.2 லட்சம் மோசடி செய்த மகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
    • போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இதில் 3-வது மகள் அனந்தநாயகி (37). இவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை மீட்டு கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.

    ஆனால் 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே பத்திரத்தை ராஜேஸ்வரி சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×