என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?
    X

    பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும்.
    • முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர பல படிகளைத் தாண்டி வருகிறோம். பர்சனல் பைனான்சில், முதலீடுகளை கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் போஸ்ட் ஆ பீஸ் திட்டங்கள், பேங்க் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் பார்த்தோம். அடுத்து வருவது பாண்ட்ஸ் எனப்படும் பத்திரங்கள். பங்குச் சந்தை வருவதற்கு முன்பே பத்திரங்கள் பிரபலம் அடைந்திருந்தன.

    பத்திரங்கள் என்றால் என்ன? கடன் வாங்குபவர்கள், கடன் தருவோரின் பணத்தை என்றைக்கு எவ்வளவு வட்டியுடன் திருப்பித் தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக தரும் உத்தரவாதமே பத்திரங்கள் எனப்படும். பேங்க் எப்.டி. ரசீது கூட ஒரு பத்திரம்தான்.

    எனக்கு நஷ்டமே வரக்கூடாது என்று உறுதியாக எண்ணுபவர்கள், நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாத சீனியர் சிட்டிசன்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் ஆகியோருக்கு பத்திரங்கள் கைகொடுக்கும்.

    பத்திரங்களில் அரசுப் பத்திரங்கள், கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்கள் என்ற இரு வகை உண்டு. ரிஸ்க் குறைந்தால், வருமானமும் குறையும் என்னும் சூத்திரத்தின்படி கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்களை விட அரசுப் பத்திரங்களில் ரிஸ்க்கும் குறைவு; வருமானமும் குறைவு.

    அரசுப் பத்திரங்கள்

    "அரைக் காசென்றாலும் அரண்மனைக் காசு" என்பார்கள். அதிலுள்ள நம்பகத்தன்மை அப்படி. மத்திய, மாநில அரசுகள் மற்றும் என்.ஹெச்.ஏ.ஐ., ஹட்கோ என்.டி.பி.சி. போன்ற அரசு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு செலவுகளுக்காகவும், வளர்ச்சித் தேவைகளுக்காகவும் பத்திரங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் முதலீட்டுக் காலம் ஐந்து முதல் நாற்பது வருடங்கள் வரை. முன்பெல்லாம் பெரிய கம்பெனிகளுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே இவற்றில் முதலீடு செய்யும் பாக்கியம் கிட்டும். தற்போது சிறு முதலீட்டாளர்களும், கோஆப்பரேடிவ் பேங்குகளும் கூட இவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது 8.05 சதவீதம் வட்டி தரும் ஆர்பிஐ ப்ளோட்டிங் ரேட் ஏழு வருட சேவிங்ஸ் பத்திரங்கள் நடப்பில் இருக்கின்றன. குறைந்த பட்ச முதலீடு ரூ. 1000/. உச்ச வரம்பு கிடையாது. இவற்றின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும் வாய்ப்பு உண்டு. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் வட்டி வழங்கப்படும். எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி. போன்ற வங்கிகள் மூலமும், போஸ்ட் ஆ பீஸ் மூலமும் இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். அல்லது நேரடியாக ஆர்.பி.ஐ. ரீடெய்ல் டைரக்ட் போர்டல் மூலமும் வாங்கலாம்.

    சுந்தரி ஜகதீசன்


    சீரோ கூப்பன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறிப்பிடப்படாது. முகமதிப்பு மட்டுமே குறிப்பிடப்படும். உதாரணமாக ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பத்திரங்கள் ரூ.800/க்கு விற்கப்படலாம். இவற்றுக்கு அவ்வப்போது வட்டி வழங்கப்படாது. முதிர்வு காலத்தில் முகமதிப்பான ஆயிரம் ரூபாய் தரப்படும்.

    ஆகவே அவ்வப்போது வட்டி தேவைப்படுவோருக்கு இது உதவாது.

    டேக்ஸ் ப்ரீ பத்திரங்களின் வட்டிக்கு வரி கிடையாது. இன்றைய தேதியில் 6 சதவீதம் வட்டி (வரி இல்லாதது) கிடைப்பது வங்கி வட்டி விகிதத்தை விடக் கவர்ச்சியானது அல்லவா? ஆனால் 2016க்குப் பின் இவை புதிதாக வெளியிடப்படவில்லை. அதற்கு முந்தைய பத்திரங்கள் சந்தையில் சற்று அதிக விலைக்குக் கிடைக்கின்றன.

    மத்திய அரசுப் பத்திரங்களின் முதிர்வுகாலம் நீண்டது; இடையில் அவசரத் தேவைக்காக க்ளோஸ் செய்ய முடியாது; தேவையென்றால் சந்தையில்தான் விற்கமுடியும் என்ற நெகடிவ் பாயின்ட்டாககுறைபாடு இருந்தாலும், அரசு பத்திரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவற்றில் முதலீடு செய்யலாம்.

    மாநில அரசுப் பத்திரங்கள்:

    தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம். இது வெளியிடும் பாண்டுகளில் பத்திரங்கள் பிக்சட் டிபாசிட் வகையைச் சார்ந்தவை. மாநில அரசின் ஆதரவுடன் இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படுவதால் ஓரளவு உத்தரவாதம் உள்ளது என்று நம்பலாம். இவற்றில் முதலீட்டுக் காலம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை. வட்டி விகிதம் 8.10 சதவீதம் முதல் 9.31 சதவீதம் வரை.

    வட்டியை குறிப்பிட்ட இடைவெளிகளில் வாங்கிக் கொள்ளலாம்; அல்லது முதல் + வட்டி என்று முதிர்வுகாலத்தில் மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம். மினிமம் முதலீடு 50000 ரூபாய். பொர்ம்ரூ. ஒரு லட்சம். 15 ஜி அல்லது ஹெச் படிவம் கொடுத்தாசமர்ப்பித்தால் மூலவரிப்பிடித்தம் (Tax Deducteடிat Source) இருக்காது.

    முதல் போட்டு மூன்று மாதங்களுக்கு அப்புறம் ப்ரீமச்சூர் க்ளோஷர் அனுமதி பண்ணுவாங்க. ஆனால் பெனால்டி அதிகம். 2-3 பர்சன்ட். இந்த பாண்டுகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்கு க்ளோஸ் செய்யலாம். ஆனால் 2 சதவீதம் - 3 சதவீதம் அளவு பெனால்ட்டி இருக்கும். கடன் தேவை என்றாலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கிக்கலாம். என்.ஆர்.ஐ.கள் கூட இதில் முதலீடு செய்ய முடியும். ஆனால் முதிர்வுத் தொகையை வேற்று நாடுகளுக்கு அனுப்ப முடியாது. வங்கியின் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும் இந்த முதலீடு, ஓரளவு பாதுகாப்புடன் நல்ல வருமானமும் தரும் என்பதால் பரிசீலிக்கத்தகுந்த ஒன்று.

    பெருநகர கார்ப்பரேஷன்கள் கூட குடிநீர் வழங்கல், தெருப் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள் போன்ற பணிகளுக்காக பத்திரங்கள் வெளியிடுகின்றன. சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், இந்தூர் போன்ற நகர முனிசிபாலிட்டிகள் இது போன்ற பத்திரங்களை வழங்கியுள்ளன. திருப்பூர், திருச்சி, கோவை போன்ற நகரங்களும் பத்திரங்கள் வெளியிட அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

    கார்ப்பரேட் பாண்டுகள்:

    உற்பத்தி நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள், என்.பி.எப்.சி. போன்ற எந்த நிறுவனமானாலும், ரூ. 100 கோடிக்கு மேல் நிகரமதிப்பு இருந்தால் சந்தையில் பத்திரங்களை விற்று, முதல் திரட்டலாம். பத்திரங்கள் வெளியிடும் முன்பு இக்ரா, கேர், க்ரிசில் போன்ற ரேட்டிங் நிறுவனங்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு தரநிர்ணய சான்றிதழைப் பெற வேண்டும். அந்த நிறுவனங்கள் கம்பெனியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து, கம்பெனியின் பிசினஸ் ரிஸ்க், பொருளாதார ரிஸ்க், மேலாண்மைத்தரம், பணத்தை திருப்பித் தரும் வலிமை இவற்றைப் பொறுத்து ஏஏஏ முதல் டிவரை தரச்சான்றிதழ் அளிக்கின்றன.

    ஏஏஏ நிறுவனங்களில் குறைந்த வட்டியும், டிநிறுவனங்களில் அதிக வட்டியும் கிடைக்கும். Aக்குக் குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ. ஐயாயிரத்தை தாண்டுமெனில், 15 ஜி/ஹெச் படிவங்கள் சமர்ப்பித்து மூலவரிப்பிடித்தத்தை தவிர்க்கலாம். அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், சந்தையில் இவற்றை விற்க இயலும்.

    சில கம்பெனிகள் அவசரம் என்றால் முதிர்வு காலத்துக்கு முன்பு பணத்தைப் பெற அனுமதித்தாலும், பெனால்ட்டி விதிக்கும். ஆகவே நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்களால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்யும்போது பார்க்கவேண்டிய விஷயங்கள்:

    முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும். நிறுவனத்துக்கு ரேட்டிங் நிறுவனங்கள் கொடுத்த ரேட்டிங், ஒற்றை Aக்குக் கீழே இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பல்ல. முதலீடு செய்த பிறகும் அவ்வப்போது ரேட்டிங்கை செக் செய்வதுடன், சந்தையில் நிறுவனம் குறித்து ஏதாவது எதிர்மறைத் தகவல்கள் வருகிறதா என்றும் கவனிக்க வேண்டும். நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிந்தால் நம் முதலீட்டை வெளியே எடுத்துவிடுவது நல்லது.

    இரண்டாவதாக, நிறுவனம் தரும் வட்டி விகிதம் சந்தையின் போக்குக்கு ஒத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்ற நிறுவனங்கள் 8 சதவீதம் வட்டி தரும்போது ஒரு நிறுவனம் மட்டும் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறினால், அது நமக்காக விரிக்கப்பட்ட வலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    பொதுவாக சீனியர் சிடிசன்களுக்கு 0.25 சதவீதம் பர்சென்ட், ஆன்லைனில் முதலீடு செய்தால் ஒரு 0.24 சதவீதம், ஒரு முறை செய்த முதலீட்டை அதே நிறுவனத்திலேயே புதுப்பித்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு 0.10 சதவீதம் என்று கிட்டத்தட்ட பேங்க் வட்டியை விட 2 -3 பர்சென்ட் அதிக வருமானம் கிடைக்கும். வங்கிகள் முழுகினால் நம் டெபாசிட்டுக்கு ரூ. ஐந்து லட்சம் வரையிலான காப்பீடு உண்டு. அதுபோன்ற காப்பீடு இந்தப் பத்திரங்களுக்கு இல்லை. ஆகவே பேங்கை விட ரிஸ்க்கும் அதிகம்; வருமானமும் அதிகம்.

    மூன்றாவதாக, ஒரு வருடம் / மூன்று வருடம் / ஐந்து வருடம்/ பத்து வருடம் என்று தரப்படும் கால அளவுகளில் எதைத் தேர்வு செய்யலாம் என்று தீர ஆலோசிக்கவேண்டும். ஏனெனில், இந்த பத்திரங்களில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பாக எடுத்தால் பெனால்டி அதிகம். ஆகவே நம்மால் எவ்வளவு வருடங்கள் அந்தப் பணத்தை அவசரத் தேவைக்குத் தொடாமல் இருக்கமுடியும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, பின்னர்தான் முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    டாட்டா ஸ்டீல், டாட்டா ஹௌசிங் கேபிடல், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி பைனான்ஸ் போன்ற ஆரோக்கியமான நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில், நம் மொத்த முதலீட்டில் பத்து சதவிகித அளவு முதலீடு செய்தால் பாதுகாப்புக்குப் பாதுகாப்பு; வருமானத்திற்கு வருமானம்.

    உங்களிடம் ஏற்கெனவே அரசு / நிறுவனப்பத்திரங்கள் உள்ளனவா? அவற்றில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் என்னென்ன?

    Next Story
    ×