சிறப்புக் கட்டுரைகள்

உடலில் நச்சுக்களை நீக்கும் வெள்ளைபூசணி!
- புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.
- பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
வெள்ளை பூசணி பெயரை கேட்டவுடனேயே அமாவாசைக்கு திருஷ்டி சுத்தி நடுரோட்டில் உடைப்பதும், பூசணிக்காயில் முகம் வரைந்து வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவதும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். மார்கழி மாதத்தில் இதன் பூவை வாசலில் கோலத்தின் மீது வைப்பர். கல்யாண வீடுகளில் 'காசி அல்வா' எனப்படும் இந்த வெள்ளை பூசணி அல்வா மிகவும் பிரபலம் பெற்றது. தரையில் படர்ந்து எந்த பெரு முயற்சிகளும் இல்லாமல் நாம் எதிர்பாராமலே காய்க்கும். இதற்கும் மவுசு சற்று குறைவுதான். ஆகவேதான் மக்கள் அலட்சியப்படுத்தும் இந்த சத்துமிக்க காய்கறிகளின் முக்கியத்து வத்தினைப் பற்றி இங்கு எழுதப்படுகின்றது.
* வெண் பூசணி செரிமானத்தினை கூட்டும். மலச்சிக்கலை நீக்கும்.
* நார் சத்து மிகுந்த காய். ஆகவே எடை குறைப்பிற்கு உகந்தது.
* வைட்டமின் 'டி' சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது.
* வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க உதவுகின்றது.
* மன அழுத்தம் நீங்க உதவுகின்றது.
* புண்களை ஆற்றும் சக்தி கொண்டது.
* பொட்டாசியம், சி சத்து, நார்ச்சத்து இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டுகின்றது.
* உடலில் நீரிழப்பு தடுக்கப்படுகின்றது.
* தொடர்ந்து தினமும் 100 மி.லி. அளவு வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் உடலில் நச்சுகள் நீங்கும்.
* உடற்பயிற்சி செய்வோர் பயிற்சி முடிந்த பிறகு வெள்ளை பூசணி ஜூஸ் அருந்தலாம்.
* இதன் விதைகள் இதயம், எலும்பினைக் காக்கின்றது.
* நல்ல தூக்கம் இருக்கும்.
* சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* பூசணி விதை வீக்கங்களை குறைக்க வல்லது. * சத்து நிறைந்தது.
* சில வகை புற்று நோய்களின் பாதிப்பினை தவிர்க்க வல்லது.
* சிறு நீரக பை, ப்ராக்ட் ரேட் இவற்றினை பாதுகாக்கும்.
* நிறைந்த மக்னீசியம் சத்து கொண்டது.
அவரைக்காய்
அநேக வீடுகளில் கொத்து கொத்தாய் சர்வ சாதாரணமாய் காய்த்து கிடக்கும் காய்கறி. பலருக்கு காசு செலவு கூட இல்லை. பறித்து உடனே செய்யலாம். இதுதான் ஆரோக்கியம். இதுதான் மகிழ்ச்சி. புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது. அடிக்கடி அவரைக்காயினை உணவில் சேர்த்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* புரதச் சத்திற்கும் உதவும். இன்று அநேகரது பிரச்சினையே புரதம் தேவையான அளவு இல்லாததுதான்.
* நார்சத்து கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்தும். சீரண சக்தியினைக் கூட்டும்.
* வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது எடை குறைப்பிற்கும் உதவும்.
* இரும்பு சத்து ரத்த சோகையினை தவிர்க்கின்றது.
* பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
கமலி ஸ்ரீபால்
* வைட்டமின் ஏ,சி உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.
* சிங்க் செல் பாதுகாப்பிற்கு உதவுகின்றது.
* இதிலுள்ள குறைந்த உப்பு, நார்சத்து, பொட்டாசியம் போன்றவை இருதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
* தாது சத்துகள் நிறைந்தது. வலுவான எலும்புகள் உருவாகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.
* சர்க்கரை அளவு கட்டுப்படுகின்றது.
கவனம்
G6PD குறைபாடு உள்ளவர்கள் அவரைக்காயினை தவிர்க்க வேண்டும்.
* அறுவை சிகிச்சை என்றால் 2 வாரம் முன்பே அவரைக்காய் எடுக்க வேண்டாம்.
* பிஞ்சு அவரை, அவரை விதை இவையெல்லாம் இயற்கை (எ) இறைவனின் அருளே.
இன்றைக்கே அவரைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலாமே.
இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது. இருதய பாதிப்பு அபாயம் குறைகின்றது. எலும்புகள் வலுவாய் இருக்கும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும். சக்தி, மனநிலை சீராவது, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
பூசணிக்காயை விதவிதமாய் சமைக்கத் தெரியும். தினம் ஒரு டீஸ்பூன் பூசணி விதை அநேக நன்மைகளைத் தரும்.
ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைப் பெற்று பழக்கத்தில் கொண்டு வரலாமே.