கிரிக்கெட் (Cricket)

140-க்கு ஒரு விக்கெட்: 261 ரன்களுக்கு ஆல் அவுட்- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி
- டாஸ்மின் பிரிட்ஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்கா 140 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா வால்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் சதம் விளாசி அசத்தினார்.
இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.