கிரிக்கெட் (Cricket)

விமான விபத்தில் 265 பேர் பலி: கருப்புப் பட்டை அணிந்து மவுன அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
- டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
- இந்திய வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகிறார்கள்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய ஏ அணியும் இங்கிலாந்து சென்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையில் வீரர்களை பகிர்ந்து கொண்டு பயிற்சி போட்டி நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அகமதாபாத் விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார்.
அதேபோல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரி உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவ விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர்.
Next Story