கால்பந்து

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
- இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
- இறுதிப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Next Story