விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி ஹாங்காங் வீரரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
Next Story