என் மலர்

    விளையாட்டு

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து, பிரனாய் தோல்வி
    X

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து, பிரனாய் தோல்வி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோற்று வெளியேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், 17-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-ம் இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுபியிடம் போராடி வீழ்ந்தார்.

    Next Story
    ×