விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 19-21, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
Next Story