தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு..!
- கடந்த 1ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
- 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 1ஆம் தேதி தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிமன்றம் அவர்களுக்கு 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்த ராமேஸ்வரம் மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story