என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை - விளையாட தடை போட்டதால் விபரீதம்
    X

    9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை - விளையாட தடை போட்டதால் விபரீதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார்.
    • பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் அவந்திகா (9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் 2 பேரும் நேற்று வீட்டில் இருந்தனர். பெற்றோரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார். அதற்கு லோகேஷ், வெயில் கடுமையாக இருப்பதால் இப்போது வெளியே சென்று விளையாட வேண்டாம். மாலையில் பொழுது சாய்ந்ததும் போய் விளையாடு என கூறியதாக தெரிகிறது.

    உடனே தந்தையிடம் கோபித்துக்கொண்டு அந்த சிறுமி தனது அறைக்கு சென்று உள்ளார். பெற்றோரும் மகள் சாதாரணமாக கோபித்துக் கொண்டு சென்றிருக்கலாம் என கருதினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று மதிய உணவு சாப்பிட மகளை அழைத்தனர். அப்போது அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த லோகேஷ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ஆசை மகள் அவந்திதா தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    9 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×