தமிழ்நாடு செய்திகள்

அண்ணனுக்கு அரோகரா.. வித்தியாசமாக முழக்கமிட்ட தொண்டர் - சட்டென கடுப்பான செல்லூர் ராஜு
- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.
- முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி மதுரையில் பொதுமக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர். பூஜையின்போது முருகனுக்கு அரோகரா என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது செல்லூர் ராஜுவுக்கு அரோகரா என தொண்டர் ஒருவர் கோஷம் எழுப்பவே சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story