தமிழ்நாடு செய்திகள்

குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிய கொடூர மாமன்- போலீஸ் விசாரணை
- இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
- குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை லெமோரியாவை தனது சொந்த மாமா சஞ்சய் கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். குழந்தையின் கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பிறகு, குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் தலையை போலீசார் மீட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story