என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது- மு.க.ஸ்டாலின்
    X

    தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது- மு.க.ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.
    • டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    சேலம்:

    அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதாக தி.மு.க. அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    * 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன?

    * 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம்.

    * எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

    * மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா?

    * பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது.

    * 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன?

    * மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.

    * சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்... எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.

    * அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய நிலை என்ன?

    * மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர்.

    * ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    * கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய அமைச்சர் செகாவத்.

    * தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

    * தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா?

    * டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×