தமிழ்நாடு செய்திகள்

எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது, பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன - இ.பி.எஸ்.
- பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சிபில் ஸ்கோர் பிரச்சனையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன்.
* பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
* தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
* காங்கிரஸ் தலைமையில் த.வெ.க. கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story