தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.
ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.
ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.
தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.
2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.
41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.
அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.