என் மலர்

    ராணிப்பேட்டை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் ஆஞ்சநேய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவினை ஒட்டி திங்கட்கிழமை உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

    மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை.
    • சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு வழியாக சென்றார்.

    அப்போது மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த படியும், பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் வெளியே காத்திருந்ததை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டார்.

    காத்திருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் மின்விசிறி, இருக்கை, குடிநீர் என எதுவும் இல்லை என குற்றம் சாட்டினர். காத்திருக்கும் அறையை கூட திறக்காமல் இருப்பது தெரிந்தது.

    அதனை தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    பணியில் இருக்க வேண்டிய டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு காலதாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும், அதேபோல் விளக்கம் கொடுத்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி செயல்பட்டு வந்தார்.
    • தலையில் காயத்துடன் சக்கரவர்த்தி உடல் மீட்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    தலையில் காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் சக்ரவர்த்தி இறப்பு கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.

    ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.

    தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.

    ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.

    தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.

    2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

    நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.

    41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.

    அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
    • சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம் அருகே கல்லூரி பேராசிரியர் தினகரன் (42) ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தினகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தினகரன் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.
    • வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார்.

    ராணிப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியின் மகள் ஜனனி (வயது 15) மற்றும் ஒரு மகன் உள்ளார்.

    ஜெகத்குமார், பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனையடுத்து ஜெகத்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

    பிரியா தனது மகள் மகனுடன் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 செல்ல தயாராக இருந்தார்.

    விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அவருடைய உறவினர்கள் லக்சயா, சரண்யா ஆகியோரும் சென்னையில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்தனர்.

    நேற்று காலை ஜெகத்குமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜனனி லக்சயா ஆகியோர் இருந்தனர். அப்போது யாருக்கும் தெரியாமல் கே.ஜி கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி (21)என்பவர் திடீரென அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டினார்.

    இதனை லக்சயா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் லக்சயாவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அவரை வீட்டுக்கு வெளியே தள்ளினார். வீட்டுக்குள் இருந்த ஜனனியை கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜனனி துடிதுடித்து இறந்தார்.

    வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் லக்சயாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து ஜெகத்குமார் வீட்டு முன்பாக திரண்ட மக்கள் இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜனனி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அங்கு பதுங்கி இருந்த வாலிபர் சுப்பிரமணியை சரமாரியாக அடித்தனர்

    கொண்ட பாளையம் போலீசார் வாலிபர் சுப்பிரமணியை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணி மற்றும் கத்தி வெட்டுப்பட்ட லக்சயா ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று சுயநினைவு இல்லாமல் இருந்த சுப்பிரமணிக்கு நினைவு திரும்பியது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    மேலும் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து லக்சயாவிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வரும் பள்ளி அருகிலேயே வாலிபர் சுப்பிரமணியின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த் கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

    சரக்கு ரெயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருத்தணி மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் பணியாள்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை.
    • சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று காலை அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தில் தி.மு.க. வினர் தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத அரக்கோணம் டி.எஸ்.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும் கல்லூரி மாணவி குற்றச்சாட்டு.
    • பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ளார். தெய்வச்செயலுக்கு பதிலாக கவியரசு அப்பதவியில் நியமிக்கப்படுவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவி ஒருவர், தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும், பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சென்னை டிஜபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

    அத்துடன் இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார் சென்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த நிலையில்தான் தெய்வச்செயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு.
    • 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது கல்லூரி மாணவி வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னை குற்றவாளிகள் போல் காவல்துறை நடத்துகின்றன. அரசியல் தலையீடு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார். இதில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மாணவி தெரிவித்தார்.

    மாணவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில்,

    * அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு

    * 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * 20 வயதுள்ள பெண்கள் 20 பேர் பாதிப்பு என்று கூறும் பெண் அவர்களை பறறிய தகவல்களை கூறவில்லை.

    * அரசியல் பிரமுகரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
    • இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கல்லூரி மாணவி திடீரென உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

    மேலும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய முகத்தை பதிவிட்டுள்ளதை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பயன் இல்லாமல் போனது.

    பாதிக்கப்பட்ட நான் இதுபோன்ற நபர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் பெண்களுக்கு தைரியத்தை வரவழைக்கவே புகார் கொடுத்தேன். ஆனால் தற்போது என்னை போலீசார் கோழை ஆக்கிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×