என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    மேலூர் அருகே திருவாதவூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சமத்துவ மீன்பிடி திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் அருகே உள்ளது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் சோழப்பேரரி கண்மாய் ஆகும்.

    மேலூர் பகுதி கண்மாய்களில் இது ஒரு பெரிய கண்மாயாகும். இங்கு பெரியார் பாசன நீர் தேக்கி வைக்கப்பட்டு திருவாதவூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிவடைந்த பின்பு இங்கு மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமாய் உள்ளது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்று (14-ந்தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திருவாதவூர், மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேன்கள், பைக்குகள் ஆகியவற்றில் பெண்கள், சிறியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதலில் கூடினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் இங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட்டு தாரை, தப்பட்டை, வான வெடிகள் முழங்க பெரிய கண்மாய்க்கு ஊர்வலமாய் வந்தனர். அங்கு கண்மாயில் வந்து வெள்ளை துண்டு வீசினர். அப்போது சுற்றி இருந்த மக்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, குத்தா, கூடை போன்ற மீன் பிடி சாதனைகளை பயன்படுத்தி ஏராளமான மீன்களை பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர். ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோவிற்கு அதிக மான மீன்களை பிடித்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    இந்த மீன்பிடித் திருவிழா சமத்துவ மீன் பிடித்து விழாவாக ஜாதி மத பேதமின்றி நடைபெற்று வருகிறது. இங்கு பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விலைக்கு விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளில் கொண்டு சென்று சமைத்து சாமி கும்பிட்டு தங்கள் உறவினர்களுக்கும் வழங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பெய்து இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாய் உள்ளது.

    Next Story
    ×