தமிழ்நாடு செய்திகள்

இன்று முழு நேர மின்தடை.. எந்தெந்த பகுதிகள்? - முழு லிஸ்ட்
- பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
- மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 24-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நாளை ஏப்ரல் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சின்னக்கடை வீதி முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோயில், மேட்டு தெரு, ஈஸ்வரன் கோயில் பகுதி, ப்ரெட்ஸ் ரோடு, அருணாச்சலம் ஆசாரி தெரு, கடைவீதி, கல்லாங்குத்து ஒரு பகுதி, ஏடிசி டிப்போ, கோவிந்தன் தெரு, பெரியார் தெரு, வ உசி மார்க்கெட், மடம் தெரு, பழைய பேருந்து நிலையம், வணக வளாகம், சிங்க மெத்தை, அசோக்நகர், பாலாஜி நகர், பச்சப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்க தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.