என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு 900 மதிப்பெண் வழங்க வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு 900 மதிப்பெண் வழங்க வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
    • சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    என் மகள் ஹரினி, கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஹரினி சூட்டிங்பால் விளையாட்டு வீரர். கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடை பெற்ற ஆசிய சூட்டிங்பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங்பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.

    பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் விளையாட்டு பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சர்வதேச போட்டிகளில் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

    சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சூட்டிங்பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் குழு விளையாட்டு ஆகும். இதற்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார்.

    விசாரணை முடிவில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×