என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: ரூ.5 லட்சம் பட்டாசு பறிமுதல்- 3 பேர் மீது வழக்கு
    X

    குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: ரூ.5 லட்சம் பட்டாசு பறிமுதல்- 3 பேர் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி உள்ளது. அதிக தேவை இருப்பதால் அந்த ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

    இதனை சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெம்பக்கோட்டை பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இரண்டு இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர். இந்த சோதனையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர், பால முருகன் மற்றும் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×