என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    கேளம்பாக்கம் அருகே விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
    X

    கேளம்பாக்கம் அருகே விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 பேருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி, பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5). நேற்று மாலை ஹரிதாஸ், திருப்போரூரை அடுத்த காயார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 11 மணி அளவில் ஹரிதாஸ் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் தையூர் நோக்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே காயார் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரிதாஸ், அவரது மனைவி சுகந்தி, மகன் லியோ டேனியல் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகன் ஜோ டேனியல் படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், அவரது மனைவி பிந்து, மகன் அபினேஷ் பால்மோனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அஸ்வின்குமார் கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ளார். அவர் இரவு கடையில் வியாபாரம் முடிந்து காரில் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளார்.

    விபத்தில் காயம் அடைந்த சிறுவன் ஜோ டேனியல், அஸ்வின் குமார் உள்பட 4 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×