என் மலர்

    செங்கல்பட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2017ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
    • சிறுமி வசித்து வந்து குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யபட்டு, நீதிமன்றம் தூக்கத்தண்டனை வழங்கியது.

    2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.

    இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கியது. தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்

    நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரெயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது சோகான் தபஸ், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

    பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சூரஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
    • 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

    இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.

    பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

    இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

    செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தபோது அவர் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவி படித்து வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.

    கடந்த மாதம் ராஜேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றதால், தனது கர்ப்பத்தை கலைக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் தந்தை தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

    சென்னை:

    தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் 'தடம் எண் 55 பி' என்ற பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூர், கிரவுன் பேலஸ், அண்ணா நகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரெயில் நிலையம், ஆதனூர் பிரதான சாலை, வண்டலூர் பங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை வந்தடையும். இது போல கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

    புறப்படும் நேரம்: இப்பஸ் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 7.30, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும் கிளாம்பாக்கத்தில் இருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
    • சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.

    * அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.

    * சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    * மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.

    * தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
    • பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.

    இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
    • ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள்.

    இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

    அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018 -ம் ஆண்டு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் தங்களது வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இதனால் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

    இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்று இரவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.
    • சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    சென்னையை அடுத்து உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர்.

    அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்களத்தில் இருக்கும் தலைவனாக தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    அதற்கு காரணம் அவரது கொள்கை தான். அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர்க்களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.

    எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை.

    நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது. அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 பேருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி, பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5). நேற்று மாலை ஹரிதாஸ், திருப்போரூரை அடுத்த காயார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 11 மணி அளவில் ஹரிதாஸ் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் தையூர் நோக்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே காயார் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரிதாஸ், அவரது மனைவி சுகந்தி, மகன் லியோ டேனியல் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகன் ஜோ டேனியல் படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், அவரது மனைவி பிந்து, மகன் அபினேஷ் பால்மோனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அஸ்வின்குமார் கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ளார். அவர் இரவு கடையில் வியாபாரம் முடிந்து காரில் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளார்.

    விபத்தில் காயம் அடைந்த சிறுவன் ஜோ டேனியல், அஸ்வின் குமார் உள்பட 4 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×