என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு: சட்டப்படி உரிய முடிவு எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
    X

    முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு: சட்டப்படி உரிய முடிவு எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
    • காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது

    இந்து முன்னணி சார்பில் வருகிற 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக சில நாட்கள் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், காவல்துறை சார்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது பெங்களூரு ஸ்டேடியம் நிலச்சரிவு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் என்ன செய்வது என காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோவில்கள் அமைக்கப்படுகின்றன.

    அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் முத்துக்குமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×