தமிழ்நாடு செய்திகள்

பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
- சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.