தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7507 கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 5 ஆயிரம் கன அடியாகவும், இரவு 8 மணியளவில் அது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
அதே போல் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7507 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.