என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது- அமைச்சர் கே.என்.நேரு
    X

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது- அமைச்சர் கே.என்.நேரு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.

    திருச்சி:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை ஏற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பட்டாக்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது.

    திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த் தலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை பா.ஜ.க.வினரால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் . அவரது எண்ணம் நிறைவேறாது.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் உங்கள் தொகுதிக்கு மாற்றிக் கொள்வதாக ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு, அவர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது என்றார்.

    Next Story
    ×