தமிழ்நாடு செய்திகள்

சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் - மு.க.ஸ்டாலின்
- சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
- சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
* தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் ஒருவர்.
* சேலத்திற்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
* சேலத்தில் 9 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* சேலம் மாவட்டத்தில் மட்டும 56 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்
* சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.
* சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும்.
* ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.