தமிழ்நாடு செய்திகள்

நெல் கொள்முதல் விலை உயர்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
- நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான்.
* 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.
* தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
* அணையிலிருந்து பொங்கிவரும் காவிரி போல் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
* விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள்.
* சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும்.
* சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.131 உயர்வு, சன்னரகம் ரூ.156 உயர்த்தப்படும்.
* நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.