என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழையால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தொடர் மழையால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்திலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், குளம், கண்மாய், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2949 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 396 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.15 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1417 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    ஆண்டிபட்டி 25.2, அரண்மனைபுதூர் 14, வீரபாண்டி 18.2, வைகை அணை 27.6, போடி 4, உத்தமபாளையம் 3.8, கூடலூர் 4.4, பெரியாறு அணை 34.8, தேக்கடி 4.2, சண்முகாநதி 7.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×