தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை: ஓ.பி.எஸ். பேட்டி..!
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-
* முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
* கல்வி நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
* பா.ஜ.க. வில் இருந்து தற்போது எந்த அழைப்பும் வரவில்லை.
* அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் மேற்பார்வையில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்.
* நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த பாஜக- அதிமுக தற்போது இணைந்துள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததற்காக வாழ்த்துகள்.
இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.