என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு அருகே நள்ளிரவில் தனியார் பால் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு
    X

    ஈரோடு அருகே நள்ளிரவில் தனியார் பால் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
    • போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

    கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    Next Story
    ×