தமிழ்நாடு செய்திகள்

சோறு கூட போடுறோம், ஓட்டுப் போட மாட்டோம்... பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி
- பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
- ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள் என்று பாஜக தொண்டர் கூற சிரிப்பலை எழுந்தது.
விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று கூற அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.
வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
Next Story