தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
- கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, அருண்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.
Next Story