என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
    • வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும்.

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 9 கோடிக்கும் அதிகமான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தற்போது தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.

    கடந்த 5-ந் தேதி 500 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 545 காசுகளாக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 8 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி கோடை காலமான தற்போது 7 கோடியாக சரிந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறி உள்ளனர்.

    இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    குறிப்பாக கோடை காலங்களில் முட்டை கோழிகள் தீவனத்தை சரியாக எடுத்து கொள்ளாததால் முட்டை உற்பத்தி குறைவது வழக்கம். மேலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கோழிகள் சரியாக உணவு எடுத்து கொள்ளாததால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி வழக்கத்தை விட 1 கோடிக்கும் மேல் சரிந்துள்ளது.

    மேலும் வழக்கமாக குளிர் காலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும். வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும். ஆனால் தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் வெயில் காலத்திலும் முட்டையின் நுகர்வு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் முட்டையின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

    முட்டையின் உற்பத்தி குறைந்த நிலையில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது . இதனால் ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே வியாபாரிகள் முட்டைகளை பண்ணைகளில் ஒவ்வொரு நாளும் எடுத்து செல்கிறார்கள். இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை 97 ரூபாய்க்கும், கறிக்கோழி விலை 105 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் நேற்று குறைந்துள்ளது.

    Next Story
    ×