தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசும் - ராஜேந்திர பாலாஜி
- பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?
- நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசத்தான் செய்யும். அ.தி.மு.க.வின் பிரச்சனையை பா.ஜ.க.வும் பேசும்.
* பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?
* அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. அச்சத்தில் உள்ளது.
* நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
* காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story