தமிழ்நாடு செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
- ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர்.
இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.