தமிழ்நாடு செய்திகள்

குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ் ஆதங்கம்
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
- தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ராமதாஸ் கூறியதாவது:-
* ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.
* இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.
* அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.
* என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.
* தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
* தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.
* குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார்.
Next Story