தமிழ்நாடு செய்திகள்

என் மூச்சு உள்ளவரை நானே பா.ம.க. தலைவர் - ராமதாஸ்
- என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
- பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன்.
தைலாபுரம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்.
* பா.ம.க. தொண்டர்களில் 100-ல் 90 சதவீம் பேர் எனக்கு ஆதரவு தருகின்றனர்.
* நான் பிரசாரத்திற்கு போகும்போது 200 பேர் தான் கூட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
* குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.
* பிள்ளைகள் தங்களது தாய்- தந்தையை மதிக்க வேண்டும் என சொன்னால் கோபம் வருகிறது.
* நான் 100 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன்.
* நான் தலைவராக இருப்பதில் அன்புமணிக்கு என்ன பிரச்சனை?
* என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
* பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன் என்றார்.