என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம் - மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு
    X

    சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம் - மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு.

    திருச்செந்தூர்:

    நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

    கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

    மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள் விடுதலை மாநாடு நடந்தது.

    அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்றார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வருகிற 15-ந் தேதி, உழவர் பாசறை சார்பில் கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழுக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை, குலசேகரன்பட்டினத்தில் கள் இறக்கும் போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது,

    தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட, ஏராளமான ஊட்டச்சத்து கள்ளில் உள்ளது. கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்ற கொள்கையுடன், கள் விடுதலை போராட்டத்தில், சீமான் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த பனை விவசாயிகளின் ஓட்டுகளை கவர, சில அறிவிப்புகளையும், சீமான் வெளியிட உள்ளார். வருகிற 15-ந்தேதி, அவர் பனை மரத்தில் ஏறி, கள் இறக்க உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் சீமான் பனை மரத்தில் ஏறி, பயிற்சி எடுக்க உள்ளார். பனை மரத்தில் ஏற வேண்டாம் என, அவரது கட்சியினர் கூறியபோதும், அவர் பனை ஏறுவதில் உறுதியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பனை ஏறுவதற்கு தகுந்த மரங்களை தேடும் பணியில், போராட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே சீமான் நேரடியாக களமிறங்கும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×