என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்: செல்லூர் ராஜூ
    X

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்: செல்லூர் ராஜூ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
    • எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். 241 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணிஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.

    ஒரு முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

    தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.

    அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் செய்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×