என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    வரி மோசடி முறைகேடு: மதுரை மேயர் இந்திராணி பதவி விலக கோரி அ.தி.மு.க. போர்க்கொடி
    X

    வரி மோசடி முறைகேடு: மதுரை மேயர் இந்திராணி பதவி விலக கோரி அ.தி.மு.க. போர்க்கொடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி சொத்துவரி முறைகேடு புகாரில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, பைக்காரா கருப்புசாமி, ரூபிணி குமார், நாகஜோதி, ரவி, மாயத்தேவன் ஆகியோர் எழுந்து நின்று மேயர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியது. இதனால் மாமன்ற கூட்டம் தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலை ராஜா தலைமையில் கூட்ட மன்ற அரங்கின் மையப்பகுதிக்கு வந்து மேயர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது மேயர் இந்திராணி பேசுகையில், இது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய இடம். அ.தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து கபட நாடகம் ஆட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேயரின் பேச்சுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. கவுன்சிலர்களை உடனடியாக வெளியேற்றும்படி மேயர் இந்திராணி மாமன்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாமன்ற அறைக்கு வெளியே இருந்த போலீசார் உள்ளே வந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.

    வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சொத்துவரி முறைகேட்டில் தொடர்புடைய மண்டல தலைவர்கள் பதவிகளை மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மேயர் இந்திராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தெரிவித்தார்.

    இதனிடையே மாநகராட்சி சொத்து வரி விவகாரத்தில் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்து மேயரிடம் கடிதம் அளித்த மண்டல தலைவர்கள் வாசுகி, சுவிதா, பாண்டிச்செல்வி, சண்முக புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, நிலைகுழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி ஆகியோரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஒப்புதல் அளித்த தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×