தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.
- போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீ்ழூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியது.
இந்த கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.
பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story