என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் சொற்ப அளவியிலேயே விழுந்து வந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×