தமிழ்நாடு செய்திகள்

தண்ணீர் வரத்து இல்லாததால் 57 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவமழையின் போது மழை கைகொடுத்ததால் அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று முற்றிலும் நின்று விட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் 57.71 அடியாக குறைந்துள்ளது. அணையில் முறைநீர் பாசன அடிப்படையில் தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி குடிநீருடன் சேர்த்து 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3178 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1392 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. மழை எங்கும் இல்லை.