தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையின் மேல்மட்ட மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் 12 மணியளவில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இரவு 8 மணி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தற்போது நீர்மின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.