தமிழ்நாடு செய்திகள்

91-வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு
- மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.